பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!
Jun 15, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொருளாதார மந்தநிலையால், நிதி  நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சீனா முதலீட்டாளர்களின் உலகளாவிய லாபங்களின் மீதும் வரி வசூலிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் நிதி வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளைச் சீனா முன்னெடுத்துள்ளது. சீன மக்களின் வெளிநாட்டு வருமானத்துக்கு வரி விதிக்கும் முயற்சிகளை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி, முதலீட்டு வருமானம், ஈவுத்தொகை மற்றும் ஊழியர் பங்கு விருப்பங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான வெளிநாட்டு வருமானத்தைச் சீன அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அயல் நாட்டு முதலீட்டு ஆதாயங்களுக்கு 20 சதவீதம் வரை சீன அரசு வரி விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும்  அதிகமான சொத்துக்களைக் கொண்டவர்களையே  இலக்கு என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும்,  இப்போது,இந்த  வரி நடவடிக்கை 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும்  குறைவான சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சீனாவின் பட்ஜெட் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு 50 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துவரும் நிலையில், இந்த ஆண்டு முதல்  நான்கு மாதங்களில் 360 பில்லியன் டாலரத் தாண்டியுள்ளது.

குறிப்பாக, சீன அரசின் இரண்டு முக்கிய நிதிக் கணக்குகளின் மொத்த வருமானம்,கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அரசின் செலவினங்கள் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.  இதனால் நாட்டின் பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

மேலும், ஏற்கெனவே திட்டமிடப் பட்ட   5 சதவீத இலக்கை சீனா எட்டாது என்று கணிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய மாதத்தில் 6.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், பெரும் பொருளாதார நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய்  மற்றும் ஷான்டாங் போன்ற நகரங்களில் உள்ள சீனர்கள், தங்கள் அயல்நாட்டு வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பை எதிர்த்துப் போராடுவதற்காக OECD ஆல் உருவாக்கப்பட்ட உலகளாவிய வரித் தகவல் பகிர்வு கட்டமைப்பின், பொது அறிக்கையிடல் தரநிலையை (CRS) சீனா 2018 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகளாவிய வருமானத்தை அறிவித்து வரி செலுத்த வேண்டும்  என்ற  சீனாவின் வரிச் சட்டங்கள்   நீண்ட காலமாகவே நடைமுறையில்  உள்ளன என்றாலும் இப்போது தான் தீவிரமாக அமல்படுத்தப் பட்டுள்ளன.

சீனாவில் முக்கியமான நகரங்களில்  முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கள் உலகளாவிய வருமானத்தில் 20 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான  சீன முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தை வெளிநாடுகளுக்கு நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும், எல்லை தாண்டிய வர்த்தக இணைப்பு வழியாக ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் பிரதான நில முதலீட்டாளர்கள் 83.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது  கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது சீனா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்து வருவதையே காட்டுகிறது.

Tags: china news todayChina in economic crisis: Investors are shocked by the jump to Americaபொருளாதார நெருக்கடியில் சீனாமுதலீட்டாளர்களால் அதிர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

Next Post

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

Related News

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies