பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்
Jul 23, 2026, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா ஒருபோதும் போரை விரும்பும் நாடாக இருந்ததில்லை என்றும், யாருக்கும் எதிராக இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பைத் தொடங்கியதில்லை எனவும் கூறினார்.

யாராவது நமக்குச் சவால் விட்டால் நாம் வலிமையுடன் பதிலளிக்கப் பாதுகாப்புத் துறைத் தயாராக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

சைபர்ப் போர், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி தாக்குதல், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை எதிர்காலப் போர்களை வடிவமைப்பதாகக் கூறிய அவர், நவீனப் போர்கள் இனி நிலம், கடல் மற்றும் வான்வெளியில் மட்டுமின்றித் தற்போது விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸிலும் விரிவடைவதாகக் குறிப்பிட்டார்.

எதிர்காலப் போர்கள் வெறும் ஆயுதப் போர்களாக இருக்காது எனக்கூறிய அவர், அவைத் தொழில்நுட்பம், உளவுத்துறை, பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரத்தின் ஒருங்கிணைந்த விளையாட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி ஒரு சரியான எடுத்துக்காட்டு எனக் கூறிய அவர், உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் ஆயுத மேம்பாட்டின் வெற்றியை நிரூபிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஆப்ரேஷன் சிந்தூர் உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் தற்போது 24 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், இது வர்த்தகம் அல்லது உற்பத்தி பற்றியது மட்டுமல்ல, இது இந்தியாவின் மாறிவரும் உலகளாவிய அடையாளத்தின் சின்னம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: indian armyராஜ்நாத் சிங்பாதுகாப்புத்துறை அமைச்சர்The dream of self-sufficiency in defence has truly come true: Rajnath Singhபாதுகாப்புத்துறை
ShareTweetSendShare
Previous Post

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

Next Post

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies