பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்
Jun 4, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா ஒருபோதும் போரை விரும்பும் நாடாக இருந்ததில்லை என்றும், யாருக்கும் எதிராக இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பைத் தொடங்கியதில்லை எனவும் கூறினார்.

யாராவது நமக்குச் சவால் விட்டால் நாம் வலிமையுடன் பதிலளிக்கப் பாதுகாப்புத் துறைத் தயாராக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

சைபர்ப் போர், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி தாக்குதல், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை எதிர்காலப் போர்களை வடிவமைப்பதாகக் கூறிய அவர், நவீனப் போர்கள் இனி நிலம், கடல் மற்றும் வான்வெளியில் மட்டுமின்றித் தற்போது விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸிலும் விரிவடைவதாகக் குறிப்பிட்டார்.

எதிர்காலப் போர்கள் வெறும் ஆயுதப் போர்களாக இருக்காது எனக்கூறிய அவர், அவைத் தொழில்நுட்பம், உளவுத்துறை, பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரத்தின் ஒருங்கிணைந்த விளையாட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி ஒரு சரியான எடுத்துக்காட்டு எனக் கூறிய அவர், உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் ஆயுத மேம்பாட்டின் வெற்றியை நிரூபிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஆப்ரேஷன் சிந்தூர் உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் தற்போது 24 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், இது வர்த்தகம் அல்லது உற்பத்தி பற்றியது மட்டுமல்ல, இது இந்தியாவின் மாறிவரும் உலகளாவிய அடையாளத்தின் சின்னம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: indian armyராஜ்நாத் சிங்பாதுகாப்புத்துறை அமைச்சர்The dream of self-sufficiency in defence has truly come true: Rajnath Singhபாதுகாப்புத்துறை
ShareTweetSendShare
Previous Post

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

Next Post

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை – தர்மேந்திர பிரதான் உறுதி!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு? – மம்தா கூட்டத்தை புறக்கணித்த 60 எம்எல்ஏக்கள்!

வணிக சிலிண்டர் விலை ரூ. 46 உயர்வு : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies