முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 10,000 போலி வாக்காளர்கள் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 10,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 29, 2025, 09:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாருக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி, 65 லட்சம் ஏழை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவருடன் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பிரச்சாரத்திற்குச் சென்றிருக்கிறார். இதை நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. யார் கூப்பிட்டாலும் பின்னால் சென்றுவிடலாமா? தமிழ்நாட்டின் பெருமையை நாம் நிலைநாட்ட வேண்டாமா? என அவர் கேள்வி எழுப்பினார்.

முதலில், பீகாரில் என்ன நடந்தது என்பதை நமது முதலமைச்சர் தனது உளவுத்துறை மூலம் விசாரித்துத் தெரிந்துகொண்டு சென்றிருக்க வேண்டும். அங்கு நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில், 22 லட்சம் பேர் இறந்து போனவர்கள், 36 லட்சம் பேர் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், 7 லட்சம் பேர் இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள்.

இறந்து போனவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி போராட்டம் நடத்தினால், அதற்கு நமது முதலமைச்சர் ஆதரவு தெரிவிக்கலாமா? இது என்ன நியாயம்? என்றும் அவர் வினவியுள்ளார்.

இதேபோல, முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே சுமார் 10,000 போலி வாக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலில் அதை சரிசெய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதிமுகவை இன்னும் திராவிட இயக்கமாகவே பார்க்கிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். அப்படியானால், அவர் இருக்கும் கூட்டணியை விட்டுவிட்டு, ஜெயிக்கப் போகும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டியதுதானே?

சமீபத்தில் ஒரு காணொளியில், அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசியதை நான் பார்த்தேன். அவர் ஒரு நல்ல நண்பர். சில கருத்துக்களைத் தெளிவாகப் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். என்பது 100 ஆண்டுகளாக நாட்டுக்குச் சேவை செய்யும் ஒரு இயக்கம். திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் எங்கள் கூட்டணிக்கு வருவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags: BJP state president Nainar Nagendran000 fake votesrahul gandhikolathur10hief Minister Stalin
ShareTweetSendShare
Previous Post

சென்னை மணப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Next Post

கூடலூர் மற்றும் பந்தலூரில் வெளுத்து வாங்கிய மழை!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies