ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு - உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
Jul 29, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஏற்கனவே, பொருளாதார மந்தநிலை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, பாகிஸ்தானுடன் மோதல், பயங்கரவாதம் உள்ளிட்டவற்றால் அந்நாடு பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தன் பங்கிற்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலநடுக்கம்.

ஆகஸ்ட் 31ம் தேதி, நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதியில் இருந்து 27 கிலோமீட்டர்த் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி 11.47 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடுவதற்குள், பல கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொள்ளவே, என்ன செய்வது எனத் தெரியாமல் மற்றவர்கள் தவிக்கத் தொடங்கினர்.

இந்தக் கோர சம்பவம் நடந்து சிறிது நேரம்தான் கடந்திருக்கும். அதற்குள் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இது ரிக்டரில் 4.7 என்ற அளவில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கத்தால் பலத்த சேதமடைந்தபோதும், கீழே விழாமல் நூலிழையில் தப்பித்த பல கட்டடங்கள் இந்தமுறைச் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தன. இதில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.

குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள சோகி, வாட்பூர், நூர் குல், மனோகி, சபா தாரா மாவட்டங்கள் இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2 நாட்கள் கடந்த நிலையிலும் மீட்பு பணிகள் இதுவரை ஓய்ந்தபாடில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில்
சடலங்கள் மீட்கப்பட்டபடியே உள்ளன. தற்போதுவரை ஆயிரத்தி 400க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சடலங்களை மீட்க ஒருபுறம் மீட்புபடைப் போராடி வருகிறது என்றால், படுகாயமடைந்தவர்களுக்குப் போதிய சிகிச்சை வழங்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பலர் உரிய சிகிச்சைக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

நிலைமையைச் சமாளிக்க முடிந்த வரைப் போராடிய தாலிபான் அரசு, உதவிக்கரம் நீட்ட வேண்டும் என உலக நாடுகளிடம் கையேந்தியது. உதவி கேட்டதுதான் தாமதம். பல்வேறு உலக நாடுகள் டன் கணக்கில் அடுத்தடுத்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றன. இந்தியாவில் இருந்து 15 டன் உணவுப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள், 1,000 கூடாரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

துரிதமான மீட்பு நடவடிக்கையால் முடிந்தவரை உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைக்கு பலரது எதிர்பார்ப்பு.

Tags: Earthquake shakes Afghanistan: Death toll rises - India extends helping handஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ShareTweetSendShare
Previous Post

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

Next Post

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies