ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு - உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
Apr 30, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 08:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஏற்கனவே, பொருளாதார மந்தநிலை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, பாகிஸ்தானுடன் மோதல், பயங்கரவாதம் உள்ளிட்டவற்றால் அந்நாடு பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தன் பங்கிற்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலநடுக்கம்.

ஆகஸ்ட் 31ம் தேதி, நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதியில் இருந்து 27 கிலோமீட்டர்த் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி 11.47 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடுவதற்குள், பல கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொள்ளவே, என்ன செய்வது எனத் தெரியாமல் மற்றவர்கள் தவிக்கத் தொடங்கினர்.

இந்தக் கோர சம்பவம் நடந்து சிறிது நேரம்தான் கடந்திருக்கும். அதற்குள் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இது ரிக்டரில் 4.7 என்ற அளவில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கத்தால் பலத்த சேதமடைந்தபோதும், கீழே விழாமல் நூலிழையில் தப்பித்த பல கட்டடங்கள் இந்தமுறைச் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தன. இதில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.

குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள சோகி, வாட்பூர், நூர் குல், மனோகி, சபா தாரா மாவட்டங்கள் இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2 நாட்கள் கடந்த நிலையிலும் மீட்பு பணிகள் இதுவரை ஓய்ந்தபாடில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில்
சடலங்கள் மீட்கப்பட்டபடியே உள்ளன. தற்போதுவரை ஆயிரத்தி 400க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சடலங்களை மீட்க ஒருபுறம் மீட்புபடைப் போராடி வருகிறது என்றால், படுகாயமடைந்தவர்களுக்குப் போதிய சிகிச்சை வழங்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பலர் உரிய சிகிச்சைக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

நிலைமையைச் சமாளிக்க முடிந்த வரைப் போராடிய தாலிபான் அரசு, உதவிக்கரம் நீட்ட வேண்டும் என உலக நாடுகளிடம் கையேந்தியது. உதவி கேட்டதுதான் தாமதம். பல்வேறு உலக நாடுகள் டன் கணக்கில் அடுத்தடுத்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றன. இந்தியாவில் இருந்து 15 டன் உணவுப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள், 1,000 கூடாரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

துரிதமான மீட்பு நடவடிக்கையால் முடிந்தவரை உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைக்கு பலரது எதிர்பார்ப்பு.

Tags: Earthquake shakes Afghanistan: Death toll rises - India extends helping handஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ShareTweetSendShare
Previous Post

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

Next Post

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies