ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் : நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கருத்து!
Jul 29, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் : நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கருத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 22, 2025, 06:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமானவரி சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு ஆகிய இரு சீர்திருத்தங்களால், இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறைப்பால், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும், நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு காத்திருப்பதாகவும் அறிவித்தார்.. அதன்படி அண்மையில் டெல்லியில் நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 4 அடுக்குகளாக இருந்து ஜிஎஸ்டி விதிப்பு 2 அடுக்குகளாக குறைத்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று கூறினார். வருமான வரிச் சலுகை மூலம் முதல் பரிசும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாவதால், இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குவதாகவும் கூறினார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் 99 சதவிகித பொருட்களின் விலை குறைவதாகக் குறிப்பிட்ட அவர், வர்த்தகத்தில் இருந்து சிக்கல்கள் களையப்பட்டிருப்பதால், அதன் பலனை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கிடைக்கும் சலுகைகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் குறிப்பிட்ட அவர், ஏழைகள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என அனைவரும், தங்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்த விலையிலேயே வாங்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார். வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும என்றும் அவர் தெரிவித்தார். சிறு, குறு தொழில்கள் மக்களுக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருட்களை நாட்டு மக்கள் கர்வத்தோடு வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டில் சர்வதேச தரத்தில் பொருட்கள் தயாரிக்கப்படும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாம் அனைவரும் இணைந்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

 

Tags: GST tax cut.gst on essential goodsGST benefitsgst compliancegst tax reductionnirmala sitharaman gstgst reform 2025gst simplificationgst savingsgst for small businessesgst impact on pricesgst updates 2025gst implementationgstigst tax changesgtsgst exemptionsgst on healthcaregst policy updatespm modi speech on gstgst analysis
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் அமல் – விலை குறைந்த பொருட்களின் பட்டியல்!

Next Post

நயினார் நாகேந்திரன் தலைமையில் திண்டுக்கல் நகரில் நடைபெற்ற பாஜக இரண்டாவது பூத் கமிட்டி மாநாடு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies