மக்களின் மனம் கவர்ந்த "மாப்பிள்ளை சம்பா முறுக்கு"!
Jul 29, 2026, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு”!

Murugesan M by Murugesan M
Oct 20, 2025, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளியை ஒட்டி நெல்லையில் மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாராகும் முறுக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசி முறுக்கு மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்தது எப்படி? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

திருநெல்வேலி என்றாலே அல்வாவுக்கு பெயர் பெற்ற நகரம்தான். ஆனால் நெல்லை டவுனில் விதவிதமாகத் தயாரிக்கப்படும் முறுக்குகள்தான் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளன. பாரம்பரியமிக்க பொருட்களை பயன்படுத்தி மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் இந்த முறுக்குகளுக்கு மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கைச்சுத்து முறுக்கு, தேன் குழல் முறுக்கு உள்ளிட்ட பல்வேறு முறுக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் மாப்பிள்ளை சம்பா முறுக்குக்கு கூடுதல் வரவேற்பு.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாப்பிள்ளை சம்பா முறுக்கை வாங்கிச் செல்கின்றனர். மாப்பிள்ளை சம்பா அரிசி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வைக் குறைக்கும்.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.செரிமானத்தை மேம்படுத்தும் என உடலுக்குத் தேவையான பல்வேறு நன்மைகளைத் தருகிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்டவையும் அடங்கியிருக்கின்றன.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் தனித்துவமான சிவப்பு நிறம் அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் காரணமாக இருக்கிறது. எனவே தான் மாப்பிள்ளை சம்பா முறுக்குக்கு மவுசு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள் விற்பனையாளர்கள்.

இந்நிலையில்தான் நெல்லையில் மாப்பிள்ளை சம்பா முறுக்குகளை மக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். மாப்பிள்ளைகள் மட்டுமல்ல. அனைத்து பிள்ளைகளும் இந்த முறுக்குகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.

Tags: தீபாவளி"The groom's samba murukku" captivated the hearts of the people
ShareTweetSendShare
Previous Post

இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை மிளிரச் செய்யட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies