யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!
Aug 29, 2026, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 05:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

சென்னைத் தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியற்றவர்களை நீக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் விநாயகம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறும் என்றும்,

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி சிறப்பு திருத்தத் தீவிர பணிகள் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.

1950ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 முறைச் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்ப் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டனர்.

Tags: தேர்தல் ஆணையம்சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிNo one needs to fear - Election Commission confirms in Chennai High Court
Share
Tweet
SendShare
Previous Post

வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கிரகம்!

Next Post

ஆந்திரா : கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

Related News

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies