விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விரைவில் விற்பனைக்கு வரக்கூடும் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது. இதுகுறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

இந்திய பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்நிலையில், மும்பை பங்கு சந்தையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, RCB அணியின் உரிமையாளரான UNITED SPIRITS LIMITED நிறுவனம், தங்கள் துணை நிறுவனமான ROYAL CHALLENGERS SPORTS PVT LTD நிறுவனம் மீது STRATEGIC REVIEW-ஐ தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்த அணியின் எதிர்கால உரிமைகள் குறித்த முக்கிய தீர்மானத்தை எடுப்பதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

UNITED SPIRITS நிறுவனம் தனது தாய் நிறுவனமான DIAGEO குழுமத்துடன் இணைந்து, தனது பிரதான வணிகமான மதுபான உற்பத்தியை தொடர விரும்புகிறது. இதன் காரணமாக RCB அணியை அந்நிறுவனம் “முக்கியம் இல்லாத சொத்து” என வகைப்படுத்தவுள்ளதாக SEBI-க்கு அளிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. DIAGEO நிறுவனத்தின் இந்த முடிவின் அடிப்படையில் அணி மீதான உரிமை விலகல் அல்லது புதிய முதலீட்டாளர்கள் சேர்க்கை ஆகியவை விரைவில் பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, அணி விற்பனை தொடர்பான முடிவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் எடுக்க DIAGஏஓ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஐபிஎல் சீசனுக்குள் RCB அணிக்கு புதிய உரிமையாளர் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. DIAGEO நிறுவனம் இந்தியாவில் தனது சொத்துக்களை மறுகட்டமைக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், விளையாட்டு சார்ந்த சொத்துக்கள் அதன் முக்கிய வணிக நோக்கங்களுக்கு பொருந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது RCB ரசிகர்களிடையே ஒருபுறம் ஆவலையும், மற்றொருபுறம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி, ஃபாப் டூ பிளெஸிஸ் போன்ற முன்னணி வீரர்களை கொண்டுள்ள RCB அணி, IPL வரலாற்றில் மிகுந்த பிரபலத்தையும், வணிக மதிப்பையும் பெற்ற அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த விற்பனை அல்லது உரிமையாளர் மாற்றம் அணியின் எதிர்காலத்தையும், அதன் பிராண்ட் மதிப்பையும் பாதிக்கக்கூடியதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

RCB அணியின் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகாவிட்டாலும், அதன் உரிமையாளர்கள் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை, அணியின் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய முடிவுக்கு அடித்தளமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: NITED SPIRITS LIMITEDSTRATEGIC REVIEWBombay Stock ExchangeIndian Premier LeagueROYAL CHALLENGERS BANGALORERoyal Challengers Bangalore sale
Share
Tweet
SendShare
Previous Post

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies