மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா, சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பைஜெய்ந்த் பாண்டா, தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.
















