ISI உளவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது : அடுத்தடுத்து கைதாகும் பாக். ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்!
Sep 10, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ISI உளவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது : அடுத்தடுத்து கைதாகும் பாக். ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 3 பேரை டெல்லி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்கள் கைதானது எப்படி? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுதுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் டெல்லியில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள மற்றொரு நபருக்கு ஆயுதங்களை வழங்க அவர்கள் திட்டமிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மேலும் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கடும் தகவல்கள் தெரிய வந்தன. இவர்கள் அனைவருக்கும் சர்வதேச ஆயுத கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது.

குறிப்பாகப் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து நாடு முழுவதும் இவர்கள் விநியோகம் செய்து வந்துள்ளனர். சாலை மார்க்கமாக ஆயுதங்களை கடத்தினால் சிக்கிக்கொள்வோம் என்பதால், ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளனர். எப்போதும் இரட்டை ட்ரோன்களை கொண்டே இந்தக் கும்பல் ஆயுதங்களை கடத்தியுள்ளது.

ஒரு ட்ரோன் காட்சிகளை படம் பிடிக்கவும், மற்றொரு ட்ரோன் ஆயுதங்களை எடுத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினாலும் ரேடார் மூலம் கண்டுபிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சென்சார் கருவிகளின் பார்வையில் இருந்து தப்ப கார்பன் பூசப்பட்ட பாலித்தீன் பைகளில் ஆயுதங்களை வைத்துக் கடத்தியுள்ளனர்.

இந்த அனைத்து தகவல்களையும் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 4 பேர் கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர். பஞ்சாப்பை சேர்ந்த ஹர்குன் ப்ரீத் சிங், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் பிரஜாபதி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆரிப் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

இவர்களுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-க்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான ஷெஹ்சாத் பட்டிக்கும் ( Shahzad Bhatti) இந்த மூவருக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ம் தேதி பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் நகர் காவல் நிலையம் முன்பு கையெறி குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தத் தாக்குதலை இவர்கள்தான் நடத்தியதாகவும், ஷெஹ்சாத் பட்டி இந்தத் தாக்குதலுக்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் காவல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கைதான இவர்கள் அனைவரிடமும் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த கட்ட விசாரணை மற்றும் சோதனைகளின் முடிவில் மேலும் பலர் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: 3 people linked to ISI spy agency arrested: Pak-backed sleeper cells arrested in successionபாக். ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்றத்திற்கு காரில் நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி.!

Next Post

“மாருதி” கார்கள் நுழைய தடை விதித்த வினோத கிராமம் – காரணம் தெரியுமா?

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies