"மாருதி" கார்கள் நுழைய தடை விதித்த வினோத கிராமம் - காரணம் தெரியுமா?
Jul 31, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“மாருதி” கார்கள் நுழைய தடை விதித்த வினோத கிராமம் – காரணம் தெரியுமா?

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் “மாருதி” என்ற பெயர் அபசகுனம் என நம்பப்படுவதால், அந்தப் பெயர்கொண்ட மாருதி கார்கள் கூடக் கிராமத்துக்குள் நுழையக் கூடாது என்ற பழமையான நம்பிக்கை ஊர்மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் நந்தூர் நிம்பா தைத்யா என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்து மக்களின் பழமையான நம்பிக்கை இவர்களிடையே ஒரு அபூர்வமான மரபை உருவாக்கியுள்ளது. அது என்னவென்றால் இந்தக் கிராமத்திற்குள் மாருதி கார்கள் உள்ளே நுழையக் கிராம மக்கள் வாழ்நாள் தடை விதித்துள்ளனர்.

மாருதி என்ற பெயரை இவர்கள் அபசகுணமாகக் கருதுவதால், பல தலைமுறைகளாக இந்த வித்தியாசமான நடைமுறையை இம்மக்கள் கடைபிடித்தும் வருகின்றனர். அதேபோல, இந்த நந்தூர் நிம்பா தைத்வா கிராமத்தில் இந்து கடவுளான ஹனுமானுக்கு கோயில்களோ, சிலையோ கூட அமைக்கப்படவில்லை.

இவ்வளவு ஏன் ஹனுமான் அல்லது மாருதி என்ற பெயர்கொண்டவர்கள் கூட இந்தக் கிராமத்தில் இல்லை. அந்தப் பெயர்களைத் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வைக்கவும் இந்த ஊர் மக்கள் விரும்புவதில்லை. ஊர் பெரியவர்களின் கூற்றுப்படி, அந்த ஊரின் காவல் தெய்வமாக உள்ள நிம்பா தைத்யாவை பற்றிய ஒரு புராண கதையே, இந்த வழக்கத்தை அவர்கள் கடைபிடிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் ஹனுமானுக்கும், நிம்பா தைத்யாவுக்கும் ஏற்பட்ட மோதல் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, அதற்கு முடிவுகட்டப் பகவான் ஸ்ரீராமரே நேரடியாக வந்ததாக நம்பப்படுகிறது. அப்போது இந்தக் கிராமத்திற்கு ஒரே காவல் தெய்வமாக நிம்பா தைத்யாவே இருக்க வேண்டும் என ஸ்ரீராமர் அருள்வாக்கு கூறியதால், அதனை ஏற்று ஹனுமான் அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது.

அதன் பிறகு, இந்தக் கிராமத்திற்குள் ஹனுமானின் தோற்றம் எந்த வடிவில் இருந்தாலும், அது தீய பலனை தரும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் வேரூன்றத் தொடங்கியது. இந்த நம்பிக்கை கோயில், சிலை, பெயர் போன்றவற்றை தாண்டி நாளடைவில், மனிதர்களின் வாழ்க்கை தேர்வுகளையும் தற்போது தீர்மானிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக மாருதி என்ற பெயர் ஹனுமானின் பெயர்களுள் ஒன்றாகக் கருதப்படுவதால், அந்தப் பெயர்கொண்ட மாருதி பிராண்ட் கார்களை வாங்குவதோ, அந்த கார்களை கிராமத்திற்குள் நுழையவிடுவதோ தங்களுக்கு நல்லதல்ல என இந்தக் கிராம மக்கள் கருதுகின்றனர். இந்த நம்பிக்கையை வலுப்படுத்தவும் ஒரு பழங்கதையையும் இந்த ஊர்மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாகப் பல ஆண்டுகளுக்கு முன் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மாருதி 800 ரக காரை வாங்கியதால், அவரது மருத்துவ தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், காரணம் புரியாமல் தவித்த அவர் அந்தக் காரை விற்றுவிட்டு வேறொரு காரை வாங்கியதால், மீண்டும் அவரது தொழில் முன்னேற்றம் அடைந்ததாகவும் சொல்கின்றனர்.

வெளியூர் மக்களுக்கு இது வெறும் மூட நம்பிக்கையாகத் தோன்றினாலும், நந்தூர் நிம்பா தைத்யா கிராம மக்களின் பார்வையில், இது அவர்களின் வாழ்வை பல நூற்றாண்டுகளாகக் காத்து வரும் புனித மரபாகப் பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி இந்த வழக்கத்தை கடைபிடித்து வரும் கிராம மக்களால், இந்தக் கிராமமும் இந்தியாவின் வரைபடத்தில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

Tags: Strange village bans entry of "Maruti" cars - do you know the reason?"மாருதி" கார்கள் நுழைய தடைவினோத கிராமம்
ShareTweetSendShare
Previous Post

ISI உளவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது : அடுத்தடுத்து கைதாகும் பாக். ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்!

Next Post

“இனி யாரும் வேலைக்கு செல்வது கட்டாயமில்லை” – எலான் மஸ்க் நம்பிக்கை!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies