திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த நபரை இரண்டு இளைஞர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருந்தணி நேரு நகரை சேர்ந்த ஜமால் பாய், பழைய பட்டுப்புடவை வியாபாரம் செய்து வருகிறார்.
ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஜமால் பாயிடம் தகராறில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
திருத்தணியில் அண்மையில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அரங்கேறும் தாக்குதல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
















