ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திமுக பெண் கவுன்சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாயல்குடி – அருப்புக்கோட்டை சாலையில் இருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வரை 24 ஏக்கரில் ஓடை அமைந்துள்ளது.
இந்த ஓடையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, வெறும் 2 ஏக்கர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சாயல்குடி பேரூராட்சியின் 9வது வார்டு திமுக கவுன்சிலர் ஆபிதா, தனது கணவருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
















