தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!
Apr 29, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள்- தாய் கண்ணீர் மல்க பேட்டி!

Manikandan by Manikandan
Mar 12, 2026, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகளை கொன்றவர்களை விட்டு விடாதீர்கள் என உயிரிழந்த மாணவியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு வயக்காட்டு பகுதிக்கு சென்ற மகள் வீடு திரும்பில்லை என்றும், விடிய விடிய மகளை தேடி அலைந்ததாகவும் கூறினார். காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தாய் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய உறவினர்கள், மாணவி காணாமல் போனது குறித்து புகார் அளிக்க சென்றபோது மனுவை வாங்காமல் காவல்துறையினர் அலைக்கழித்ததாக கூறினர். வயகாட்டுப் பகுதியில் காலை 11 மணிக்கு தேடி பார்த்தபோது எதுவும் இல்லாத நிலையில், பகல் 2 மணிக்கு அந்த இடத்தில் மாணவியின் சடலத்தை கண்டெடுத்ததாகவும் தெரிவித்தனர். மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைத செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை நேரித்து சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12ஆம் வகுப்பு மாணவி காணாமல்போன புகாரை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியதாகவும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டிருந்தால் மாணவியை காப்பாற்றியிருக்காலம் எனவும் தெரிவித்தார்.

மாணவி சடலம் கிடைக்கப்பெற்ற பின்பே போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகம் சிறந்த மாநிலம் என்று எதனடிப்படையில் முதலமைச்சர் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். மாணவி மரணத்திற்கு நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் ராஜு வலியுறுத்தினார்.

Tags: murderstudentThoothukudiRAPE
ShareTweetSendShare
Previous Post

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – உறவினர்களின் சாலை மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Next Post

ஈரான் போரில் சீனா மௌனம் காக்கும் ரகசியம் – அதிர வைக்கும் பின்னணி!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies