ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம் என கட்சியின் முன்னாள் தலைவர் மக்கள் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் கோபிநாத் பழனிப்பன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈரோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன், அகில இந்தியத் தலைமை நேர்காணல் நடத்தி 5 பேரைப் பரிந்துரை செய்ததாகவும், அவர்களை தவிர்த்துவிட்டு புதிய நபரைத் தேர்வு செய்தது ஒரு நாடகமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாவட்டத் தலைவராக இருந்த தனக்கோ அல்லது தொகுதிக்காக உழைத்தவர்களுக்கோ ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது? எனவும் ஆர்ப்பாட்டம், போராட்டம் எனச் செலவு செய்து கட்சிக்காக உழைத்த தங்களை ராகுல் காந்தியும், கார்கேவும் ஏன் கவனிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
















