E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!
Jul 18, 2026, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Apr 14, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் திரிபுரா மாநில பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு அரசு அலுவலகங்கள் எப்படி இயங்கிக் கொண்டிருந்தன என்பது கடந்த தலைமுறைக்கு தெரியும். கட்டுக்கட்டாக கோப்புகள்… மேசைக்கு மேசை FILE-கள்… என எல்லாவற்றையும் தாண்டி ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். அதிலும் பழைய RECORDS-ஐ தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் டிஜிட்டல் புரட்சிக்கு பிறகு உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது.

நாளுக்குநாள் மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களை மின்னணு மயமாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக விளங்குகிறது திரிபுரா. அங்கு 2023-ஆம் ஆண்டு முதல் E-OFFICE திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன்மூலம் தேவையற்ற கால விரயம் தவிர்க்கப்படுவதோடு வெளிப்படைத்தன்மையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்களைக் காணவில்லை என்று கூறி மக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளும் காணாமல் போய்விட்டார்கள்.

அதாவது தங்களது பணியை சரிவரச் செய்யாமல் ஏமாற்றிய அலுவலர்கள் வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம் தொடங்கி கிராம பஞ்சாயத்து வரை ஏராளமான அலுவலகங்கள் டிஜிட்டல் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 40 லட்சம் பக்கங்களை கொண்ட ஒரு லட்சம் ஆவணங்களை ஸ்கேன் செய்து மின்மயமாக்கி மலைக்க வைக்கிறது திரிபுரா. எஞ்சியிருக்கும் லட்சக்கணக்கான ஆவணங்களை E FILE-ஆக மாற்றும் பெரும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு அலுவலகங்களை E-OFFICE-ஆக மாற்றியதை போல மந்திரி சபையை E CABINET-ஆக மாற்றியிருக்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர் மாணிக் சாஹா. அமைச்சரவை கூட்டம், ஆலோசனை கூட்டம் உள்ளிட்டவற்றை காகிதமே இல்லாமல் ONLINE-ல் நடத்துகிறார். இணையப் பாதுகாப்பை உறுதி செய்து E GOVERMENT RACE-ல் முந்திக் கொண்டிருக்கிறது திரிபுரா.

Tags: Digital GovernmentPaperless AdministrationPaperless CabinetPublic Service EfficiencyE Office SystemInnovation in GovernanceDigital Transformation IndiaState Government ReformsSmart GovernanceBreaking Governance NewsOnline Cabinet MeetingsGovernment DigitizationTripura E CabinetTransparency in GovernanceManik SahaAdministrative ReformsBJP Government TripuraCyber Security GovernanceE Governance IndiaDigital India Initiative
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

Next Post

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

Related News

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies