உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் தொகுதி இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளை நம்பி இருக்கும் நிலையை மாற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது.
இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியில், இந்த உற்பத்தி ஆலையில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏவுகணைகளை நிலம், நீர் மற்றும் வான் பகுதி என மூன்று தளங்களில் இருந்தும் ஏவ முடியும்.
ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லும் திறன் படைத்தது. ஒரே சமயத்தில் பல இலக்குகளை தாக்கும் வல்லமை உடையது.
இத்தகைய திறன் வாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை லக்னோ ஆலையில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் முதல் தொகுதி இந்திய ராணுவம் வசம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பிரம்மோஸ் ஏவுகணைகளை ஒப்படைத்தார்.
















