பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் 2 நாட்களுக்கு முன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து தனது முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பீகார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாம்ராட் சவுத்ரி தற்போது பீகார் துணை முதலமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். பீகார் முதலமைச்சராக நாளை சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
















