தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எவ்வளவு செலவானாலும் ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.
சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும், அம்மா உணவகம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு தரமான, ருசியான உணவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
















