பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு விஞ்ஞானபூர்வமாக ஒவ்வொருவரிடமும் 5 லட்சம் வரை கொள்ளையடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
















