அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த ஹோட்டலுக்கு இன்னும் கட்டணம் செலுத்தாததால் பாகிஸ்தான் அரசு தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் தொடர்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்காததால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தை நடந்த செரீனா ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை பாகிஸ்தான் அரசு இன்னும் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஹோட்டல் அறைகள் மற்றும் இதர சேவைகளுக்காக பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இன்னும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் முக்கியமான ஒரு சந்திப்பை நடத்திய பிறகு, தங்குமிடத்திற்கான கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் அரசு இருப்பது உலக அரங்கில் கேலிக்குள்ளாகியுள்ளது.
















