திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியிடம் கத்தி முனையில் போதை இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் 2ம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவர் மீஞ்சூர் அருகே உள்ள வல்லூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்து மூன்று இளைஞர்கள் கத்தி முனையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் டில்லி பாபு என்ற இளைஞரை மடக்கி பிடித்தனர். அவர் தப்பியோட முயன்றபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















