திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேனிக்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். சிலிண்டர் மானியத்தை குறைப்போம் என்ற வாக்குறுதியை கடைசி வரை திமுக நிறைவேற்றவில்லை என கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்ததாகவும், தமிழகத்தில் 51 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
















