மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுகவினர் ஆபாசமாக பேசி தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உறவினர்கள் திமுக வேட்பாளர் கதிரவனை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சிந்துஜா என்ற பெண்ணின் வீட்டிற்கு பரிசுப்பொருள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்கள் சிந்துஜாவை ஆபாசமாக பேசி தாக்கியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிந்துஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தநிலையில் சிந்துஜாவின் தற்கொலைக்கு காரணமான திமுக வேட்பாளர் கதிரவனை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
















