திருவள்ளூர் மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
திமுக அதிகாரமட்டம் காவல்துறையின் கைகளை கட்டி போட்டுள்ளதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், போதை பொருள் கடத்துபவனும், விற்பவனும் எங்கு இருக்கிறான் என்பது காவல்துறைக்கு தெரியாதா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
















