உதயநிதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாக வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் 11 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளதாக உதயநிதி வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். ஆனால், 2026ஆம் ஆண்டு தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் ரூ.10 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் பணம் திருப்பி செலுத்தப்பட்டதா என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே, சொத்து விவரங்களில் முரண்பாடுகள் உள்ளதால் வருமானவரித்துறையும், கார்ப்பரேட் விவகாரத்துறையும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 20ம் தேதிக்குள் இந்த மனு மீது பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.
















