ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பரப்புரை மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் சென்று தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவு அலை மிக வலுவாக உள்ளது என்றும், சாதி மத பேதமின்றி தமிழிசைக்கு ஆதரவு பெருகுகிறது எனவும் தெரிவித்தார்.
திமுக அரசை மக்கள் நிராகரிக்கப்போகும் முக்கிய காரணம் ஊழல் என குற்றம்சாட்டிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் திமுக அரசு செயல்பட்டதாக கூறினார்.
















