தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி
எந்த பிரச்னையாக இருந்தாலும், தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி என, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார். பூலாம்பட்டி பேருந்து நிலையம், கொங்கணாபுரம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஜி.கே.வாசன், தமிழகத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களைக் செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய பெருமை எடப்பாடி பழனிசாமியை சேரும் என்று குறிப்பிட்டார்.
















