மக்களவையில் பிரதமர் மோடி மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது பிரதமர் மோடி குறித்தும், ஆப்ரேஷன் சிந்தூர் பற்றியும் ராகுல் காந்தி அவதூறாக பேசினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆப்ரேஷன் சிந்தூரை விமர்சிப்பதையும், ராணுவ வீரர்களை அவமதிப்பைதையும் ஏற்க முடியாது என கூறிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாட்டு மக்களின் சொத்தான பிரதமரை அவமரியாதையாக பேசுதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மக்களவையின் விதிகளை ராகுல் காந்தி கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















