திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் லியோனியை நோக்கிக கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கீழப்புதூர் அரசமரத்தடியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அவரை நோக்கி கண்ணாடி பாட்டில் வீசப்பட்டது. அந்த பட்டில் அவர் மீது படாமல் பரப்புரை வாகனத்தில் பட்டு உடைந்து தெறித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
















