ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக, கடந்த 18ம் தேதி மட்டும் நாடு முழுவதும் 53 லட்சத்து 50 ஆயிரம் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அச்சத்தின் காரணமாக யாரும் அதிகபடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை வாங்கி சேமிக்க வேண்டாம் எனவும், PNG மற்றும் CNG விநியோகம் 100 சதவீதம் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சுடன் இயங்கி வருவதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
















