முதல்வர் ஸ்டாலின் நல்லவர் எனக்கூறி திமுக கூட்டணியில் உள்ள ஒருவர் கூட ஓட்டு கேட்கவில்லை என, பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரதனை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ளவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்குச் செய்த நன்மைகளைக் கூறி ஓட்டு கேட்க வேண்டுமென தெரிவித்தார்.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கதிரவன் கிட்னி திருட்டில் ஈடுபடவில்லை அது கிட்னி முறைகேடு என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவர் சுட்டிக்காட்டினார்.
பிரச்சாரத்துக்கு செல்லும் பொழுது எங்கள் கிராமத்து ஏரிக்கு தண்ணீர் வரவில்லை எனக் கேட்டால் லூசு என திமுக வேட்பாளர் கதிரவன் பேசுவதாகவும் அவர் சாடினார்.
ஐந்தாண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை கூறி ஓட்டு கேளுங்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
















