தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, வடவள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழ்நாட்டு தாய்குலத்தை காப்பாற்ற தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
















