திமுக அரசுக்கு பெண்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி, மகாராணி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த 33 சதவீத இடஒதுக்கீட்டை தோற்கடித்து திமுக பட்டாசு வெடித்து கொண்டாடியதாக குற்றம்சாட்டினார். கடந்த மூன்று தேர்தல்களில் கோவையில் 10 தொகுதிகளையும் வென்றதாக கூறிய அவர், நடப்பு தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
















