தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற உளவுத்துறை தகவலை தொடர்ந்து, திமுக வாக்காளர்களுக்கு பணப்பாட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடும் அதிர்ச்சியடைந்த திமுக தலைமை, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இறுதிகட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் திமுகவினர் பணத்தை தண்ணீராக வாரி இரைப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. சென்னை வில்லிவாக்கம், கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை திமுக விநியோகம் செய்வதும் தெரியவந்துள்ளது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பல ஆயிரம் கோடி ரூபாயை ஆதரவாளர்கள் வீட்டில் திமுக நிர்வாகிகள் பதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆளுங்கட்சியினர் என்பதால் பணப்பட்டுவாடாவுக்கு போலீசாரும், அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் எதிர்க்கட்சிகள் தொகுதி வாரியாக புகார் அளித்துள்ளன. தேர்தல் நியாயமாக நடைபெற, பணப்பட்டுவாடாவுக்கு கடிவாளம் போட தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
















