தமிழக சட்டமன்ற தேர்தலில் 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பின் கடந்த பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும்,
அதன் பிறகு தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கடந்த 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற பின், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வாக்காளர் பட்டியலில் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும்,
தமிழக சட்டமன்ற தேர்தலில் 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வந்த வெளியூரைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் வாக்களிக்க முடியாமல் போனது என்றும், நகரங்களில் தங்கிருந்தர்களும் ஓட்டுப் போட்டிருந்தால், வாக்குப்பதிவில் தமிழகம் புதிய உச்சத்தை தொட்டிருக்கும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
















