கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது என, சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரும் வழக்கைத் தொடர்ந்து, மத உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் தொடர்பான ஏழு முக்கிய சட்டக்கேள்விகளை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். கடவுளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்பதை முடிவு செய்வது பக்தரின் புனிதமான உரிமை என்றும் குறிப்பிட்டனர். தெய்வ நம்பிக்கையை சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
















