பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜமால்பூர் பகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள் தான் என கூறினார். ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவம், சந்தேஷ்காலி விவகாரம், கொல்கத்தா சட்டக் கல்லூரி மற்றும் துர்காபூர் கல்லூரி நிகழ்வுகள் என மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான அராஜகங்கள் அரங்கேறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பெண் முதலமைச்சர், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வியடைந்துள்ளார் எனவும், இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும் எனவும் விமர்சித்தார்.
















