மேற்கு வங்கத்தின் ஃபால்டா சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ம் தேதி மறுத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பால்டா தொகுதியில் பல்வேறு தேர்தல் விதிமீறல்கள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க முடியாதவாறு இவிஎம் இயந்திரத்தின் பொத்தான்கள் மீது ‘டேப்’ (Tape) ஒட்டி மறைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.மேலும், வாக்காளர்களுக்குப் பதிலாக மாற்று நபர்கள் வாக்களித்ததும் மற்றும் பல இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படாததும் கண்டறியப்பட்டது. இந்த புகார்களை அடுத்து, பால்டா தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து, மறுத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வரும் 21-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மே 24-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளது.எனினும், மற்ற 293 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வரும் 4-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















