ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடல் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த காமராஜ், அவரது மனைவி கார்குழலி, மகன் தமிழ் வேந்தன் மற்றும் காமராஜின் உறவினரான திருப்பூரைச் சேர்ந்த சௌபாக்கியம், அவரது மகன் மயூரான் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
காமராஜன் மகன் புவிந்திரன், சௌபாக்கியத்தின் மகள் இனியா ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், படகு விபத்தில் உயிரிழந்த கார்குழலி உடல், விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள கணவர் காமராஜின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
















