தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றபோது அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழகத்தின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்று கொண்டார். விஜய் முதலமைச்சராக பதவியேற்றபோது அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றனர். மேலும், விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகை திரிஷா, ரசிகர்கள், தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
















