திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். (IN)நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. இதில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், துணை முதல்வராக இருந்த உதயநிதி, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதன் பின்னர் கடந்த 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திமுக சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதே போல திமுக சட்டமன்ற கட்சி துணைத் தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
















