டெல்லியில் வெப்ப அலை மற்றும் வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், வெப்ப அலை மற்றும் வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு அமைப்புகளின் தயார்நிலை, முன் எச்சரிக்கை அமைப்புகள், பேரிடர் கால வளங்கள் மற்றும் துறைகள் இடையேயான ஒருங்கிணைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
உயிரிழப்பும், சொத்து சேதமும் குறைய வேண்டும் என்பதையே முக்கிய இலக்காகக் கொண்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
மேலும், நீண்டகால வெள்ளத் தடுப்பு திட்டங்கள், நதிநீர் மேலாண்மை, முக்கிய கட்டமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான முன்னறிவிப்பு முறைகள் பற்றியும் அமித்ஷா அதிகாரிகளுடன் விவாதித்தார்.
















