கோவை வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் வரும் நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று முதல் வெள்ளியங்கிரி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தற்காலிக தடைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்
தடையை மீறி மலையேற முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
















