பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்…
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக வாங்கிய வாக்கு விழுக்காடு தங்களுக்குத் தெரியும்; அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு Daily Attendance போடவில்லை என விமர்சித்த அவர், தங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் முதலமைச்சராக பதவியேற்றீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா CM Sir? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் அமைந்த திமுக ஆட்சி, எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்டது அல்ல எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
















