தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அனைவரது கட்சி பதவிகளும் பறிக்கப்படுவதாக, இபிஎஸ் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இந்நிலையில், இபிஎஸ்-ன் எதிர்ப்பையும் மீறி, சி.வி.சண்முகம் தரப்பினர் தவெகவிற்கு சட்டமன்றத்தில் ஆதரவு அளித்தது.
இந்நிலையில் தவெகவிற்கு ஆதரவாக வாக்கு செலுத்திய எம்.எல்.ஏக்கள் உட்பட, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், பென்ஜமின், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜக்கையன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிக்கப்படுள்ளது. மேலும், புதிதாக 17 மாவட்ட செயலாளர்களை நியமித்தும் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
















