நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த சிபிஐ, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
இந்நிலையில் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், மகாராஷ்டிராவின் நாசிக்கில் நீட் வினாத்தாள் அச்சிடப்பட்டு ராஜஸ்தான் வழியாக பிற மாநிலங்களில் கசிந்தது அம்பலமாகியுள்ளது.
ராஜஸ்தானில் மட்டும் 700க்கும் மேற்பட்டோரிடம் வினாத்தாள் விற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
















