தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை செயலாளராக பிரதீப் யாதவும், கைத்தறி மற்றும் கைத்தொழில், நெசவு, காதித்துறை செயலாளராக வெங்கடேசும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல கூட்டுறவு சங்க பதிவாளராக லதாவும், வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக காயத்ரி கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வேளாண்துறை இயக்குநராக முரளிதரனும், மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக முருகேஷூம் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் துணை ஆட்சியராக நல்லசிவமும், பொன்னேரி துணை ஆட்சியராக அப்துல் ரசிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
















