புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் கையெழுத்துக்காக, மூன்றாயிரம் கோப்புகள் கிடப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை, கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றது. ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய, ஒன்பது பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேற்கொண்டு அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதிலும், ஏற்கனவே பொறுப்பேற்ற ஒன்பது அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வதிலும், கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே சட்டப்பேரவை தேர்தல் காரணமாகவும், புதிய அரசு பதவி ஏற்ற பின்னும், பல்வேறு பணிகள் தொடர்பாக அனைத்து துறைகளிலும் மூன்றாயிரம் கோப்புகள் கிடப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அரசு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வசதியாக, அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்து, பணிகளை கவனிக்க, முதலமைச்சர் விஜய் உத்தரவிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
















