ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் ஆட தொடங்கிய கொல்கத்தா வீரர்கள், போட்டியின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 93 ரன்களும், ரகுவன்ஷி 82 ரன்களும் எடுத்தன்
தொடர்ந்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி வீரர்களும், பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழை பொழிந்ததால் இரு அணி ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். கேப்டன் சுப்மன் கில் 85 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதிவரை வெற்றிக்காக போராடிய சாய் சுதர்சன் 53 ரன்களுடன் களத்தில் இருக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய சுனில் நரைன் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
















